முன்னுரை
உலகின் மூத்த மொழி தமிழ்.'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'என்றார் பாரதிதாசன்.உலகப் பொதுமறை திருக்குறள் எங்கள் தமிழிலேயே உள்ளது.இனிமை என்று பொருள் தரும் இதன் பெருமையை காண்போம்.
தமிழின் தொன்மை
திராவிட மொழிகளில் தாய் மொழி தமிழ்.இதன் தன்மை வியக்கத்தக் கது.பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரம்,கி.மு நான்காம் நூற்றாண்டின் தொல்காப்பியம் இவற்றின் தொன்மைக்கு சான்றாகும்.
தமிழ் எக்காலத்திலும் சிறப்புடனே விளங்குகிறது.பாண்டிய மன்னர்கள் சங்கம் வளர்த்தும் புலவர்களை போற்றியம் தமிழ் வளர்த்தனர்.
தமிழின் சிறப்பு
தமிழில் 'ழ'கர வோசை சிறப்பு மிக்கது.இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் மனித உணர்வோடு இணைந்துள்ளது.கல்வெட்டு தொடங்கி ,கணிப்பொறி வரை ஆட்சி செலுத்தும் மொழி தமிழ்.இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் இந்திய மொழிகளின் தமிழே முதன்மையானதாக இருக்கிறது.பகைவர் சூழ்ச்சிகளை வெல்லும் ஆற்றல் பெற்றது தமிழ்.ஆங்கில ஆக்கிரமிப்பு பெற்ற இன்றைய நாளில் இந்திய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.தமிழ் தாய்மொழியாய் கொண்டோரை மட்டுமல்ல மற்றோரையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்றது.எடுத்துகாட்டாக வீரமாமுனிவர்,ஜி.யு போப் போன்றோரை கூறலாம்.
முடிவுரை
இல்லை என்று கூறாது வார்த்தைகளை எல்லை இன்றி வழங்கும் வள்ளல் எங்கள் தமிழ்.தமிழை பற்றி பாரதியின் கூற்றாகிய 'யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழியை போல் இனிதாவதை எங்கும் காணோம்'எனபது அனைவரின் உணர்வாக இருக்கிறது.
0 Comments