மத இன நாடுகளைக் கடந்து அனைவருக்குமான பொது எதிரி நெகிழி தான். இது அணு ஆயுதங்களை விட அழிவைத் தரக்கூடியது. நெகிழியால் பஞ்சபூதங்களும் மாசடைகின்றது. காலை பல் துலக்கும் குச்சியில் இருந்து இரவு படுக்கும் பாய் வரை நாம் அனைத்து தேவைகளுக்கும் நெகிழிக்கு அடிமைப்பட்டு விட்டோம். அது இப்போது பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக் முட்டை என்று நம் தலை மேல் ஏறி விட்டது. இதனால் நாம் குப்பைகளுக்கு மத்தியிலேயே குடியிருக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் 10 % மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும். எஞ்சிய 90 % எரிக்கப்படுகின்றன. நெகிழியை எரிக்கும் போது நச்சு வாயு வெளியாகிறது. இது வயது வித்தியாசம் இன்றி கேன்சர் நோயை ஏற்படுத்துகிறது.இது "நம் கண்ணை நம் கையாலேயே குத்திக் கொள்வது போல் ஆகிவிட்டது". விளைநிலங்களில் எரிக்கப்படும் நெகிழியால் நிலம் விளையும் தன்மையை இழக்கிறது. விவசாயம் அழிந்து நாம் பிளாஸ்டிக்கை உண்ண வேண்டியதாகிவிட்டது. நெகிழி எளிதில் மக்குவது இல்லை. இது மக்கிப் போக ஆயிரம் வருடங்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் மழை நீர் பூமிக்குள் செல்வது தடைபட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. (நாம் நெகிழி குடத்துடன் வரிசையில் நிற்போம்). இது நம்மை மட்டுமல்ல கால்நடைகளையும், கடல்வாழ் உயிரிகளையும் அழிக்க தொடங்கிவிட்டது. தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நெகிழி உபயோகிப்பது குற்றம் என அறிவித்துள்ளது. சந்தைகளில் நெகிழிக்கு மாற்றுப் பொருட்கள் வரத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு தனிமனிதனும் செய்யும் முயற்சியே சமுதாய புரட்சி ஆகிறது. நெகிழியை ஒழிப்போம் ஆரோக்கியமான உலகினில் வாழ்வோம்.
0 Comments