Header Ads Widget

ஊக்கமது கைவிடேல் பேச்சு

 ஊக்கமே நம்முள் மறைந்திருக்கும் மாபெரும் சக்தி. இவ்வுலகையே அடக்க துடிக்கும் அணுவிற்குள் ஒழிந்திருக்கும் ஆற்றல் போன்றதே ஊக்கம்.இதுவே அனைத்து வெற்றிகளின் இரகசியம்.வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் எந்நிலையிலும் ஊக்கம் இழக்காமல் வாழ்ந்ததை பார்க்க முடிகிறது.ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் என்பவர் உடல் இயக்கங்களை இழந்தவர்.கன்னத்து தசைகளின் அசைவு மட்டுமே இயக்கி கணினி மூலம் பேசியவர்.50 வருடங்களாக வீல் சேரில் அமர்ந்து கொண்டே அண்டங்களையும் கருந்துளைகளையும் ஆய்வு செய்து கோட்பாடுகளை வெளியிட்டார்.வரலாற்றிலும் இடம்பெற்றார்.இதனை ஊக்கமே சாதித்து காட்டியது.இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வழிதேடிய ஐரோப்பிய மாலுமிக்கு ஒரு மண் திட்டே கிடைத்தது.சோர்ந்து விடவில்லை.நன்னம்பிக்கை முனை என பெயரிட்டு பயணத்தை தொடர்கிறார்.ஊக்கம் தடை கற்களையும் இவ்வாறு ஏணிப்படிகளாக ஆக்குகிறது.ஊக்கமே இடர்களை எளிதாய் கடக்க செய்கிறது.பத்தாவது முறையாக வீழ்ந்தாலும் ஒன்பது முறை எழுந்தவர் நாம் என என்ன வேண்டும்.நாம் ஏன் திறனுடன் முயல வேண்டும் என்பதற்க்கு கவிப்பேரரசு வைரமுத்து கூறுவார்கள் "பூமியை திறந்து பார் புதையலும் கிடைக்கும் "என்று. ஊக்கமே வெற்றிக்கான மிகச்சிறந்த வழி."வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் " எனபது பழமொழி.இது ஊக்கம் பெற்றோருக்கு மிகவும் பொருந்துகிறது. இதனால் தான் வெள்ளையர்களின் பீரங்கிக்கு முன் காந்தி தாத்தாவின் கைத்தடி வெற்றி பெற்றது.ஊக்கமே விடாமுயற்சி,தைரியம் போன்ற நற்பண்பை நம்மிடம் விதைக்கிறது.நாம் அனைவரும் ஆமையும் முயலும் கதையை கேட்டிருப்போம்.தன்னிடம் போட்டிக்கு வருவது தன்னை விட திறன் வாய்ந்த முயல் என ஆமை பயப்படவில்லை.முயலின் தூக்கத்திற்கிடையே இடைவிடாது ஆமை முன்னேறியது அதற்கான பலனும் கிடைத்தது.அழகிய முறையில் வெற்றியும் பெற்றது.ஒரு செயலில் ஆர்வமும் ஊக்கமும் கொண்டால் உறக்கமின்றி விழித்திருக்கவும் விழிப்பிலும் கனவு காணவும் வைக்கும்.எச்செயலையும் எழுச்சியுடன் செய்து வெற்றி பெற முயல்வோம் .

நன்றி  

Also, see my YouTube video




Post a Comment

0 Comments