முன்னுரை
ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் ஒரு பகுதியாய் இருக்கிறான்.சமூகம் பல மனிதர்களின் கூட்டுத் தளமாக இருக்கிறது.மனிதனின் அநேக தேவைகளுக்கும் பலரின் கூட்டுமுயற்சியே தேவைப்படுகிறது."ஒற்றுமை என்றும் பலமாம்"என்ற ஒளவையின் அறிவுரையை நாம் ஒன்றாம் வகுப்பு முதலே கேட்டுள்ளோம்.
பொருள்
மனிதன் மட்டுமல்ல விலங்குகளும்,எறும்பு,தேனிகளும் ஒற்றுமையின் வலிமையை உணர்த்துகின்றன.இன்றைய விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகளும்,கல்வியறிவும் மனித ஒற்றுமைக்கு பாலமாக அமைந்திருக்கிறது.இதனை நாம் நல்ல படி பயன் படுத்த வேண்டும்.
தனிமனித ஒற்றுமையே உலகின் ஒற்றுமையாக விரிகிறது."மெல்லிய பஞ்சு துகள்கள் இணைந்தே வலுவான கயிறாக உருவாகிறது."ஒற்றுமையின் அவசியத்தை அணைத்து மதங்களும் உணர்த்துகின்றன.ஒற்றுமையை நாடு,இன,மதங்களுக்குள் ஒடுக்கி கொள்ளும் படி எம்மதமும் கூறவில்லை.
முடிவுரை
நாம் ஒற்றுமையாலேயே நம் நாட்டு விடுதலையை பெற்றோம்."தனித்திருக்கும் மரமே புயலில் வீழும்"என உணர்ந்து வலிமையாக ஒற்றுமையின் கயிறை பற்றி பிடிக்க வேண்டும்.
0 Comments