Header Ads Widget

உழைப்போம்! உயர்வோம்!-கவிதை ULAIPPOM! UYARVOM!-KAVITHAI

 












சிகரம் தொட வேண்டுமா 

சிந்தித்துப் பார் 

சிற்றேரும்புக்கும் தெரிந்த 

சிதம்பர ரகசியந்தான்

சரித்திரங்களை புரட்டிப்பார் 

சாதாரண மனிதனையும் 

சாதனையாளர் ஆக்கும் 

சிறந்த செயல் எது

அன்றே ஈசாவின் அன்னையிடம்

குர்ஆன் கூறியது 

மரத்தை உழுக்கிப் பார் 

பசி நீக்க பழம் கிடைக்கும் என

உழைப்பின் அவசியத்தை 

உணர்த்தியே நின்றது

மண்ணை பிளந்து விண்ணை நோக்கும் 

சிறுவிதை எனினும் 

விண்ணை பிளந்து

இலக்கை தாக்கும்

ஏவுகணை எனினும்

தேவை நம் உழைப்பு

வெற்றி படிகள் உன் அருகில் 

ஏறிச் செல்ல 

முயன்று உழைத்திடு

உழைத்து உயர்ந்திடு!


Post a Comment

0 Comments