#அலைபேசி உலகம் உங்கள் கையில் என்று எண்ணி உள்ளங்கையையே வெறித்து பார்க்கும் பைத்தியகாரர்களாக ஆக்கிவிட்டது.
#நிலவை காட்டி உணவை ஊட்டிய தாய்கள் இன்று அலைபேசியை காட்டியே உணவு ஊட்டுகின்றனர் . இது மழலை பருவத்திலேயே நம்மை மழுங்கடிக்கிறது.
காலத்தை அருமையை அனைவரும் உணர்ந்திருப்போம் ஆனால்,அலைபேசி நம்மிடம் ஒரு நாளில் பல மணி நேரங்களை திருடி கொள்கிறது
.திருக்குர்ஆன் எச்சரிக்கிறது'வீண் விரயம் செய்யாதீர்கள் 'என்று
நமக்கு தேவையில்லாத பலவற்றை இந்த இந்த அலைபேசி நம்மிடம் கொண்டு வருகிறது.நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டல் 'தமக்கு தேவையில்லாததை விட்டுவிடுவது ஒரு முஸ்லிமின் அழகிய பண்பாகும்'என்பதே
மேலும் இந்த அலைபேசி நம் உணவு,உடை,பண்பாடு மாறுதல்களை ஏற்படுத்தி நம் கலாசாரத்தையே சிதைத்துவிட்டது.
மீம்ஸ் என்ற பெயரில் அடுத்தவரை ஏளனம் செய்யும் கேவல புத்தியும் சிறார்களிடம் விதைக்கிறது.
ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து உயிரையே இழக்கும் அவலத்தையும் அலைபேசியே ஏற்படுத்துகிறது.
அருகிலிருப்போரின் அன்பை அலட்சியம் செய்து முகநூலில் பாவனை நட்பை செய்ய வைக்கிறது.
ஓடி ஆடும் ஆரோக்கிய விளையாட்டை மறந்து ஒடுங்கி அலைபேசியில் விளையாடும் நிலை வளர்ந்துவிட்டது.
இன்னும் சிறார்களின் உயிருக்கே பங்கம் வைக்கும் வகையில் ப்ளூ வேல் ,மோமோ போன்ற விபரீத விளையாட்டும் இதிலேயே விளைகிறது.
இதில் செய்யப்படும் குற்றங்கள் சைபர் க்ரைம் என்னும் புது குற்றப்பிரிவையே உருவாக்கி விட்டது.
அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் கண் பார்வை பாதிக்க படுவதோடு அது வெளியிடும் கதிர்வீச்சால் உடல் நிலையும் பாதிக்க படும் அபாயம் உள்ளது.
அத்தியாவசியமாய் நாம் எண்ணி பயன்படுத்தும் அலைபேசியின் நன்மைகளை விட தீமைகளே அதிகம்.இதை உணர்ந்து சிறார் பருவத்திலேயே சீராய் வாழ முயல்வோம்!
0 Comments