சிறிய விதையே என்றாலும்
சீரிய முயற்சி இருந்திட்டால்
பெரும் விருட்சமாய் மாறி
நிழல் கொடுக்கும்
சிறந்த மனிதர் எல்லோரும்
திறன் வளர்த்தே
வாழ்வில் உயர்ந்திட்டார்
மனதில் உறுதி இருந்திட்டால்
மலை சிகரம் தொடுவதும்
எளிதாகும்
வீணே நேரம் கழியாமல்
திட்டம் இட்டு திறன் வளர்ப்போம்!
0 Comments