Header Ads Widget

குழந்தை கவிதை KULANTHAI KAVITHAI



நீ மழலை மொழியில் 
பேசிடும் போது
தமிழும் அழகாய் 
கொஞ்சும்!
நீ தளிர் நடை போட்டு
நடக்கும் போது 
புவியும் வழுக்கி
இரசிக்கும்!
உனக்கு உணவு ஊட்ட 
வேண்டி தினமும் 
வானில் நிலவு
உதிக்கும்!
உன் கன்னாதில் சிதறிய 
சோற்றுப் பருக்கையில்
அழகிய சித்திரம் 
தெரியும்!
உன் பிஞ்சுக் கரங்களுள் 
சிக்கிய உலகம் 
மயங்கி உன்னிடம்
வீழும்!

Post a Comment

0 Comments