அருமை நண்பர்களே!அஸ்ஸலாமு அலைக்கும்.இன்று நம் நாடு விடுதலை பெற்ற தினம். அதனால் நம் பள்ளிக்கும் விடுமுறை கிட்டும் தினம்.சிறிது நேரம் சிந்திப்போம்.இச் சுதந்திரம் நம் நாட்டிற்கு எப்படி கிடைத்தது என்று. முகலாய மன்னர் பகதூர்ஷா ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறைப்பட்டார். சிறையிலே அவருக்கு உணவு பரிமாறப்பட்டது.உணவு வந்த மூடியிருந்த துணியை நீக்கி பார்த்தார். அங்கே அவருடைய மகன்கள் இளவரசர்களில் இருவரின் தலைகளே இருந்தன.இப்பொழுது புரிகிறதா நண்பர்களே நம் முன்னோர்கள் எப்படிப்பட்ட தியாகம் செய்து சுதந்திரம் பெற்று தந்தார்கள் என்று. நாம் நம் நாட்டிற்காக என்ன செய்ய போகிறோம். இளைஞர்களே நம் நாட்டின் மிகப்பெரிய சக்தி. நம் வாழ்நாட்களை தொலைகாட்சி,அலைபேசி,பப்ஜி கேம் என வீணடித்து விடாமல் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக ஆக்கப்பூர்வமாய் பயன் படுத்த வேண்டும்.எதிர்காலத்தில் அரசியல்,ஆன்மீகம்,பொருளியல் என பல துறைகளில் செல்ல இருக்கும் நாம் எதிலும் நேர்மையுடன் செயல்பட வேண்டும்."200 ஆண்டுகள் ஆட்டு மந்தையாய் வாழ்வதை விட 2 நாள் சீரும் புலியாய் வாழ்வதே சாலச்சிறந்தது"என்றார் திப்பு சுல்தான். இந்தியன் என்றாலே நேர்மையானவன் என்பதுமட்டுமல்ல பிரிக்க முடியா ஒன்றிணைந்த சக்தி என இவ்வுலகிற்க்கு புரிய வைக்க வேண்டும்.
அகிம்சை எங்கள் தந்திரம்!
பெற்று தந்தது சுதந்தரம்!
0 Comments