Header Ads Widget

நூலகத்தின் பயன்கள் பேச்சு NOOLAGATHIN PAYANGAL PECHU

அறிவை கொடுக்கும் கருவூலமே நூலகம்.உலகில் தோன்றிய அனைத்து அறிஞர்களின் சிந்தனைகள்,சான்றோர்களின் அனுபவங்கள் என அணைத்து நமக்கு நூல் வழியே கிடைக்கிறது.நம் மொழி அறிவை வளர்க்கவும்,வாசிப்பு திறன் மேம்பட உதவும் இடம் நூலகமே.படிப்பறிவே பாமரனையும் பண்டிதனாக்குகிறது.வாசிப்பை வலியுறுத்தும் விதமாக திருக்குர்ஆனின் முதல் வார்த்தை ‘ஓதுவீராக’என்றே இறங்கியது.நூலகம் அதிகம் உள்ள நாடுகளிலேயே மேம்பட்ட கலாச்சாரம்   தோன்றுகிறது.நற்சிந்தனைகளின் பிறப்பிடம் நூலகமே.நல்ல சிந்தனைகளே ஒழுக்கம்,மனித நேயம் போன்ற செயல்பாட்டை தாண்டி உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.இதையே பேரரிஞர் விக்டர் ஹுயூகோ கூறினார் ‘ஒரு நூலகம் திறக்க படும் போது ஒரு  சிறைச்சாலை மூடப்படுகிறது’என்று.இதன் பலன் உணர்ந்தே பள்ளி,கல்லூரி திரும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளன.நாமும் நூலகம் சென்று நூல் பல கற்று மேலும் உயர்வோம்.

Post a Comment

0 Comments