Header Ads Widget

மனிதம் பூக்கும் மகத்துவ திருநாடு - என் இந்தியா

மனிதம் பூக்கும் மகத்துவ திருநாடு - என் இந்தியா

வள்ளுவம் வார்த்தெடுத்த வரலாற்று பூமி இது!

காண்போர்கள் வியக்கும் கலாச்சார புதையல் இது!

அகிலத்திற்கு அகிம்சையை அறிமுகபடுத்திய நாடு இது!

காதலுக்காக தாஜ்மஹால் கட்டிகொடுத்த தேசம் இது!


இனம் மதம், மொழி என்று , பேதம் காட்டி பிரியாமல் 

வேற்றுமையில் ஒற்றுமையாய், வாழ்பவர்கள் இங்கு உண்டு!

மக்களுடன் மன்னர்களும், போராடி பெற்று தந்த 

பாரினிலே பெரிதான, மக்களாட்சி இங்கு உண்டு!


சக மனிதன் உணர்வுகளுடன், இயல்பாக இணங்கி வாழும்

கூட்டு குடும்ப வாழ்வு முறை, சிறப்பாக இங்கு உண்டு!

இந்திய இளைஞர்களே, சிறப்பான பொறியாளர் - என

பாரினரே விரும்பி ஏற்க்கும், பெரும் சாதனையாளர் கூட்டமுண்டு!


மானிடத்தின் இலக்கணமாய், மழலை செல்வத்தையும்

பெற்றோரையும் தானேகாக்கும், சிறப்பான பண்புண்டு!

ஈந்துதவும் குணதினிலே, கடைஎழு வள்ளல்கள்போல் 

கொடுத்துதவி வாழுகின்ற, சீதக்காதி கூட்டமுண்டு!


இயற்கை தந்துதவும், இயல்பான நற்குணங்கள் 

பலவுமே இங்கு, பரம்பரையாய் வருவதுண்டு!

மட்டில்லா குணநலன்கள், இம்மண்ணில் இருப்பதாலே 

மனிதம் பூக்கும் திருநாடாய், விளங்குகிறது என் இந்தியா!


Post a Comment

0 Comments